செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே கத்தியுடன் 8 மாணவர்கள் சிக்கினர்

Published On 2018-06-18 08:12 GMT   |   Update On 2018-06-18 08:12 GMT
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்ததில் கத்தியுடன் திரிந்த 8 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னையில் இன்று கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் செல்லும் பஸ் வழித்தடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் மாணவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கத்திகள் சிக்கியது.

இது தொடர்பாக 8 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News