search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்ட்ரல் ரெயில் நிலையம்"

    • பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.
    • தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. பேசின் பாலம் வழியாக யார்டுக்கு சென்ற ஏலகிரி விரைவு ரெயில் தடம் புரண்டது.

    தண்டவாளத்தை விட்டு மூன்று ஜோடி சக்கரங்கள் கீழே இறங்கியது. விபத்து காரணமாக மற்றொரு தண்டவாளத்தில் விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தண்டவாளத்தை சீரமைத்து, ரெயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • வடமாநிலங்களில் இருந்து வரும் ஏழு ரெயில்கள் திருத்தணியில் நிறுத்தப்படும்.
    • சென்ட்ரலில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை நகரை வெள்ளம் சூழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துவிட்டது. ஆனால் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் பகுதிகளில் தண்டவாளத்தில் தேங்கியுள்ள மழைநீர இன்னும் வடியவில்லை. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் இயக்க முடியாத நிலை 4-வது நாளாக நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் வருகை மற்றும் புறப்பாடு குறித்து ரெயில் நிலையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    1. மைசூருவில் இருந்து நேற்று புறப்பட்ட காவிரி எக்ஸ்பிரஸ் பெரம்பூரில் நிறுத்தப்படும்.

    2. மும்பையில் இருந்து சென்ட்ரலுக்கு புறப்பட்ட ரெயில் திருத்தணியில் நிறுத்தப்படும்.

    3. டெல்லியில் இருந்து புறப்பட்ட ரெயில் திருத்தணியில் நிறுத்தப்படும்.

    4. மொத்தம் ஏழு ரெயில்கள் திருத்தணி, சென்னை கடற்கரை நிலையத்தில் நிறுத்தப்பட உள்ளது.

    5. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை புறப்படும் வந்தே பாரத் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    6. ஷாலிமர் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும் கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

    • சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கடத்தப்பட்டது.
    • கடத்தப்பட்ட ஆண் குழந்தையை போலீசார் 4 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்.

    சென்னை:

    ஒடிசா மாநிலம், காந்தமால் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் லங்கேஷ்வர். இவரது மனைவி நந்தினி கன்ஹார். இவர்களது ஒரு வயது ஆண் குழந்தை ஆயூஸ். நேற்று இரவு லங்கேஷ்வர் குடும்பத்துடன் சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் சென்டரல் ரெயில் நிலையம் வந்தடைந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் அவர்கள் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் தாங்கள் கொண்டு வந்த பைகளை வைத்து விட்டு அங்கேயே தூங்கினர்.

    அதிகாலை 2.45 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகன் ஆயூஸ் மாயமாகி இருப்பதை கண்டு லங்கேஷ்வரும், அவரது மனைவி நந்தினி கன்ஹாரும் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் நிலையம் முழுவதும் தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியாததால் சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகள் முழுவதையும் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் குழந்தை ஆயூசை கடத்திச் செல்வது தெரியவந்தது. மேலும் அவர்கள் குழந்தையுடன் வால்டாக்ஸ் சாலையில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறிச்செல்வதும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் அந்த ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து அதனை ஓட்டிச்சென்ற டிரைவரைப் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் குழந்தையுடன் வந்த ஆணையும், பெண்ணையும் குன்றத்தூர் ஏரிக்கரை அருகே ஒரு வீட்டில் இறக்கிவிட்டதாக தெரிவித்தார்.

    உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று ஏரிக்கரை பகுதியில் உள்ள குறிப்பிட்ட வீட்டில் சோதனை செய்தபோது அங்கு குழந்தை ஆயூஸ் பத்திரமாக இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து குழந்தையை போலீசார் மீட்டனர்.

    மேலும் குழந்தையைக் கடத்தி வந்த தம்பதியான பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர்கள் இங்கு தங்கி தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். குழந்தை இல்லாததால் அவர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    முதலில் போலீசார் பரபாஸ் மண்டலிடம் விசாரித்தபோது மனைவியை சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு ரெயிலில் ஏற்றி விட வந்ததாக தெரிவித்தார். அவரிடம் சோதனை செய்தபோது ரெயிலுக்கான எந்த டிக்கெட்டும் இல்லை. நடைமேடை டிக்கெட் மட்டும் எடுத்து வந்து இருந்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பின்னர் அவர்கள் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அதிகமான வடமாநிலத்தவர்கள் வந்து செல்வார்கள் என்பதால் அங்கு குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் திட்டமிட்டு குழந்தை கடத்தலில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

    குழந்தை கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் ரெயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர். அவர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர். மீட்கப்பட்ட குழந்தை அயூசை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தபோது அவர்கள் கண்ணீர் சிந்தி போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

    கைதான தம்பதி பரபாஸ் மண்டல், அவரது மனைவி நமிதா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் குழந்தை இல்லாததால் கடத்தலில் ஈடுபட்டனரா? அல்லது இதேபோல் வேறு இடத்தில் குழந்தை கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாலிபர் நாசரின் செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்றார்.
    • ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சென்னை:

    விழுப்புரத்தை சேர்ந்த நாசர் இப்ராகிம் (46) என்பவர் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக நின்றார். அப்போது ஒடிசாவை சேர்ந்த பாரத் நாயக் (24) என்ற வாலிபர் நாசரின் செல்போனை திருடிவிட்டு தப்ப முயன்றார்.

    அவரை சகபயணிகள் விரட்டி பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் ஒப்படைத்தனர். அப்போது பாக்கெட்டில் இருந்த பிளேடால் பாரத் கழுத்தில் கீறிக் கொண்டார். லேசான காயம் அடைந்த அவருக்கு முதலுதவி அளித்து விசாரித்தனர்.

    இந்த நிலையில் கழிவறை உள்ளே சென்ற பாரத், ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    • வெடிகுண்டு நிபுணர்கள் தீயணைப்பு துறை வீரர்கள் ரெயில் நிலையம் முழுவதும் சோதனையிட்டனர்.
    • வியாசர்பாடிக்கு விரைந்துள்ள போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொள்வார்கள்.

    சென்னை:

    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று காலை 7.15 மணிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் 8 மணியளவில் குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொடர்பை துண்டித்து உள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக ரெயில்வே போலீசாருக்கும், பெருநகர காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீயணைப்பு துறை வீரர்கள் ரெயில் நிலையம் முழுவதும் சோதனையிட்டனர்.

    பின்பு பூக்கடை போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மற்றும் ஜூன் 21-ந்தேதி இதே போன்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் மணிகண்டன் என்பவர் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் அவரை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை விடுவித்ததாகவும் மீண்டும் அதே நபர் இன்று தொடர்பு கொண்டு இரண்டு மணிக்கு குண்டு வெடிக்கும் என தெரிவித்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    வியாசர்பாடிக்கு விரைந்துள்ள போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொள்வார்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் மீண்டும் எச்சரித்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க பெற்றோரிடம் அறிவுறுத்தவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மூன்றாவது முறையாக அதே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

    இருந்த போதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே இருப்பு பாதை மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்ப நாய்களை கொண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
    • மர்ம நபர் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், பூக்கடை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் இன்று மதியம் 2 மணிக்கு குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

    மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், இருப்பு பாதை போலீசார், பூக்கடை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த ஏப்.25-ம் தேதி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த, அதே தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளது.

    மாநில கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சென்ட்ரல் நிலையத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளை இது கவர்ந்து வருகிறது.
    • ரெயில் பெட்டி அருகே நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக சென்ட்ரல் ரெயில் நிலையம் திகழ்கிறது. இங்கு பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

    சென்ட்ரலில் மெட்ரோ, மின்சார ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் அனைத்தும் உள்ளன. இங்கு வரும் பயணிகளுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்ட சென்ட்ரல் சதுக்கம் பயணிகளிடம் வரவேற்பு பெற்று உள்ளது. நடைபாதைகள், ஓய்வு இருக்கைகள், சுரங்க நடைபாதைகள், புல்வெளிகள் ஆகிய பல்வேறு வசதிகளை பயணிகள் ஆர்வமாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகளை கவரும் வகையில் மின்சார ரெயில் பெட்டி ஒன்று பயணிகள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது. சென்ட்ரல் விரைவு ரெயில் நிலையம் மற்றும் புறநகர் மின்சார ரெயில் நிலையங்களுக்கு இடையே திறந்த வெளியில் தண்டவாளம் அமைத்து அதன் மேல் இந்த மின்சார ரெயில் பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சென்ட்ரல் நிலையத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகளை இது கவர்ந்து வருகிறது. ரெயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆர்வத்துடன் இதனை பார்த்து செல்கிறார்கள். சிலர் ரெயில் பெட்டி அருகே நின்று 'செல்பி' புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    • தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு இருந்து வடமாநிலங்கள் உள்ளிட்ட பல முக்கிய மாநகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். சென்ட்ரல் ரெயில் நிலையம் இரவு , பகல் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அச்சப்படுகிறார்கள்.

    தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். சென்னையில் தெரு நாய்களை பிடித்து கொல்வது தடை செய்யப்பட்டதால் யாருமே நாய்களை பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி விட்டன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பயணிகள் பல்வேறு புகார்கள் தெரிவித்து வருகின்றனர். ரெயில் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு உடனடியாக நாய் தொல்லையில் இருந்து விடுபட ரெயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுற்றுலா பயணிகள், தொழில் சார்ந்த வணிக பிரதிநிதிகள் நாள்தோறும் சென்னைக்கு வருகின்றனர்.
    • ரெயில்வே போலீசாருடன் இணைந்து மாநகராட்சி காப்பகங்களில் ஆதரவற்றவர்களை தங்க வைக்கிறோம்.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

    சுற்றுலா பயணிகள், தொழில் சார்ந்த வணிக பிரதிநிதிகள் நாள்தோறும் சென்னைக்கு வருகின்றனர். அப்படி வரும்போது சென்ட்ரல் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் பிச்சை எடுப்பவர்களின் செயல் அறுவருக்கத்தக்கதாக உள்ளது.

    50-க்கும் மேற்பட்ட முதியோர்கள், பெண்கள், ஆதரவற்ற குழந்தைகள், ஊனமுற்றோர் உணவுக்காக பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். சிலர் பிள்ளைகளால், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள்.

    இவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஸ்டீட் விஷன் என்ற தொண்டு நிறுவன அமைப்புடன் இணைந்து ரெயில்வே போக்குவரத்து போலீசார் பிச்சை எடுப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா, சூப்பிரண்டு பொன்ராமு ஆகியோர் முயற்சியால் 31 பேர் மீட்கப்பட்டு அவர்கள் தங்கும் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு மாற்றுதிறனாளி, 8 பெண்கள் உள்பட 31 பேர் பாதுகாப்பு இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து ஸ்டீட் விஷன் தொண்டு நிறுவனர் சீதாதேவி கூறியதாவது:-

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தை தொடர்ந்து எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் யாசகம் கேட்கும் ஆதரவற்றவர்களை மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்களை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    ரெயில்வே போலீசாருடன் இணைந்து மாநகராட்சி காப்பகங்களில் ஆதரவற்றவர்களை தங்க வைக்கிறோம். அவர்களுக்கு உணவு, தங்கும் இடம் வழங்கப்படும். வேலை செய்ய விருப்பம் இருந்தால் வெளியில் போய் விட்டு திரும்பி இல்லத்திற்கு வந்து விடவேண்டும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கோடை வெயிலையொட்டி பயணிகள் வசதிக்காக ராட்சத 4 மின் விசிறிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • கோடைவெப்பத்தையொட்டி ரெயில்வே நிர்வாகம் பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 4 ராட்சத மின் விசிறிகளை அமைத்து உள்ளது.

    சென்னை:

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கோடை வெயிலையொட்டி பயணிகள் வசதிக்காக ராட்சத 4 மின் விசிறிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பழமை வாய்ந்த முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாகும். இங்கு இருந்து வட மாநிலங்கள் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இதனால், இரவு, பகல் எப்போதும் சென்ட்ரல் ரெயில் நிலையம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி பயணிகள் கூட்டம் ரெயில் நிலையங்களில் அலைமோதி வருகிறது. தற்போது கோடைவெயில் சுட்டெரித்து வருவதால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    கோடைவெப்பத்தையொட்டி ரெயில்வே நிர்வாகம் பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 4 ராட்சத மின் விசிறிகளை அமைத்து உள்ளது.இந்த மின்விசிறிகளால் 'சிலுசிலு' என காற்று வீசிவருகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ஏற்கனவே அங்கு இருந்த சிறிய அளவிலான மின் விசிறிகளால் வெப்ப காற்று காரணமாக பயணிகள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    தற்போது சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட ராட்சத மின்விசிறிகளால் பயணிகள் இளைப்பாறி வருகின்றனர்.

    பயணிகளின் சிரமத்தை போக்க உதவிய ரெயில்வே நிர்வாகத்துக்கு பயணிகள் பலர் நன்றி தெரிவித்து உள்ளனர்.

    • குழந்தையின் பெற்றோர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த முகமது இப்ராகிம்-நபிஷா என்று தெரிய வந்தது.
    • தற்போது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 10-வது பிளாட்பாரத்தில் 2 வயது ஆண் குழந்தை தனியாக நின்று தவித்துக்கொண்டிருந்தது. அந்த குழந்தையின் பெற்றோரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் தேடினார்கள். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    உடனே குழந்தையை ரெயில் நிலைய மேலாளர் அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தை அணிந்திருந்த உடை, அங்க அடையாளம் பற்றி அறிவிப்பு செய்து பெற்றோரை தேடினார்கள். ஆனால் குழந்தையின் பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் குழந்தை அழுது கொண்டே இருந்தது.

    இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் குழந்தையை பேட்டரி காரில் அமர வைத்து ஒவ்வொரு பிளாட்பாரமாக சென்று பெற்றோரை தேடினார்கள். அப்போது 4-வது பிளாட் பாரத்தில் ஒரு குடும்பத்தினர், குழந்தையை காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தனர். பேட்டரி காரில் குழந்தை இருப்பதை பார்த்ததும் அது தங்கள் குழந்தை என்று ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தனர். அந்த குழந்தையும் அழுகையை நிறுத்தியபடி தாயிடம் ஓடிச் சென்றது.

    விசாரணையில் குழந்தையின் பெற்றோர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த முகமது இப்ராகிம்-நபிஷா என்று தெரிய வந்தது. குழந்தையின் பெயர் முகமது இக்ராம் குரோஷி.

    உறவினர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 21 பேர் சென்னை வந்துள்ளனர். உறவினரை அனுப்பிவிட்டு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தமிழ்நாடு விரைவு ரெயில் மூலம் விஜயவாடா செல்வதற்காக காத்திருந்தபோது குழந்தை மாயமானது தெரியவந்தது. தற்போது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

    • இன்று பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வருகைதர உள்ளார்.
    • விமான நிலையத்துக்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்.

    சென்னை

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையின் தொடக்க விழாவையொட்டி, 8-ந்தேதி (இன்று) பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வருகைதர உள்ளார்.

    எனவே, புறநகர் ரெயில் பயணிகள் வாகனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மூர் மார்க்கெட் வளாகத்துக்கு அருகில் உள்ள அல்லிகுளம் சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள், நடைமேடை எண்.4 முதல் 6 வரை உள்ள பழைய கான்கோர்ஸ் பகுதி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    மேலும், இன்று பிளாட்பாரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    * பிரதமர் நரேந்திர மோடி புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கும்போது, குறிப்பிட்ட நேரத்துக்கு விமான நிலையத்துக்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்.

    * பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கிவைப்பது மற்றும் மெரினா காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் கலந்துகொள்ளும் நேரங்களில் பறக்கும் ரெயில் சேவைகள் நிறுத்தப்படும்.

    ×