என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இன்று பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படாது: பறக்கும் ரெயில் சேவை ரத்து
- இன்று பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வருகைதர உள்ளார்.
- விமான நிலையத்துக்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்.
சென்னை
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையின் தொடக்க விழாவையொட்டி, 8-ந்தேதி (இன்று) பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வருகைதர உள்ளார்.
எனவே, புறநகர் ரெயில் பயணிகள் வாகனங்கள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மூர் மார்க்கெட் வளாகத்துக்கு அருகில் உள்ள அல்லிகுளம் சாலை வழியாக வந்து செல்ல வேண்டும்.
சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள், நடைமேடை எண்.4 முதல் 6 வரை உள்ள பழைய கான்கோர்ஸ் பகுதி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
மேலும், இன்று பிளாட்பாரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* பிரதமர் நரேந்திர மோடி புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கும்போது, குறிப்பிட்ட நேரத்துக்கு விமான நிலையத்துக்கு எதிரே உள்ள மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும்.
* பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொடி அசைத்து தொடங்கிவைப்பது மற்றும் மெரினா காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டுவிழாவில் கலந்துகொள்ளும் நேரங்களில் பறக்கும் ரெயில் சேவைகள் நிறுத்தப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்