search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
    X

    சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    • வெடிகுண்டு நிபுணர்கள் தீயணைப்பு துறை வீரர்கள் ரெயில் நிலையம் முழுவதும் சோதனையிட்டனர்.
    • வியாசர்பாடிக்கு விரைந்துள்ள போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொள்வார்கள்.

    சென்னை:

    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று காலை 7.15 மணிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் 8 மணியளவில் குண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொடர்பை துண்டித்து உள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக ரெயில்வே போலீசாருக்கும், பெருநகர காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீயணைப்பு துறை வீரர்கள் ரெயில் நிலையம் முழுவதும் சோதனையிட்டனர்.

    பின்பு பூக்கடை போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மற்றும் ஜூன் 21-ந்தேதி இதே போன்ற மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் மணிகண்டன் என்பவர் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் அவரை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை விடுவித்ததாகவும் மீண்டும் அதே நபர் இன்று தொடர்பு கொண்டு இரண்டு மணிக்கு குண்டு வெடிக்கும் என தெரிவித்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    வியாசர்பாடிக்கு விரைந்துள்ள போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொள்வார்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் மீண்டும் எச்சரித்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க பெற்றோரிடம் அறிவுறுத்தவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மூன்றாவது முறையாக அதே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தொடர்ச்சியாக சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

    இருந்த போதிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே இருப்பு பாதை மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்ப நாய்களை கொண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.

    Next Story
    ×