ஆரணி அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் படுகாயம்
ஆரணி:
ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் குட்டி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சாந்தா (வயது 57), ருக்கு (40), கலா (47) ஆகிய பெண்கள் கூலிக்கு வேலை செய்கின்றனர்.
இன்று காலை ஆரணி- செங்கல் சூளையில் இருந்து டிராக்டரில் 3 பெண்களும் கட்டுமான பணிக்காக செங்கற்களை ஏற்றினர். பின்னர் டிராக்டரில் செங்கற்கள் மேல் பரப்பில் அமர்ந்தபடி சென்றனர்.
சேத்துப்பட்டு ரோட்டில் உள்ள லட்சுமி நகர் என்ற இடத்தில் சென்ற போது, டிராக்டர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த 3 பெண்கள் மீதும் செங்கல் சரிந்தது. இதில் அவர்கள் 3 பேரும் பலத்தகாயமடைந்தனர். சிகிச்சைக்காக மீட்கப்பட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ருக்கு நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச் சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். இந்த விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews