செய்திகள்

காவல்காரன்பட்டி பகுதியில் நாளை மின்தடை

Published On 2018-06-13 10:10 GMT   |   Update On 2018-06-13 10:10 GMT
காவல்காரன்பட்டி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

குளித்தலை:

குளித்தலை மின்சாரவாரிய செயற்பொறியாளர் பூவராகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கரூர் மின் பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டம், அய்யர்மலை உபகோட்டத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர், பாதிரிப்பட்டி ஆகிய ஊர்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News