செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1300 கனஅடியாக சரிந்தது

Published On 2018-06-12 10:50 GMT   |   Update On 2018-06-12 10:50 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1300 கன அடியாக குறைந்தது.
ஒகேனக்கல்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் கடந்த 10 நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது காவரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் நீரின் வரத்து குறைந்தது. நேற்று மாலை 2100 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து 1300 கன அடியாக குறைந்தது.

தற்போது கர்நாடகா மாநிலத்தில் மழைபெய்து வருவதால் அங்குள்ள அணைகளான கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிரித்து வருகிறது. அந்த அணைகள் நிரம்பியதும் அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் விரைவில் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு வந்தடையும். இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வந்தடையும்.
Tags:    

Similar News