செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் நுழைவு கோபுரம் இடி தாக்கி சேதம்

Published On 2018-06-05 23:27 GMT   |   Update On 2018-06-06 12:59 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கோவிலில் இடி விழுந்ததால் கோவில் கோபுரத்தில் சேதமடைந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர். #Thanjavur #BigTemple #LIghtning
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சமீபத்தில் இந்த கோவிலில் திருடு போன ராஜராஜ சோழன் மற்றும் அம்மன் சிலைகள் ஆகியவற்றை மீட்டு மீண்டும் கோவிலில் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
 
இந்நிலையில், தஞ்சையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்தது. இதில், பெரிய கோவிலின் இரண்டாவது நுழைவு வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தின் இடது புறத்தில் இடி தாக்கியது.

இடி தாக்கியதில் 90 அடி உயரம் உள்ள அந்த கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்த யாழி சிற்பம் சேதம் அடைந்தது. சேதம் அடைந்த யாழி சிற்பம் கோபுரத்தின் மேலே விழுந்துவிட்டதால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். #Thanjavur #BigTemple #LIghtning
Tags:    

Similar News