செய்திகள்

கிருஷ்ணகிரியில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-06-02 19:00 GMT   |   Update On 2018-06-02 19:00 GMT
கிருஷ்ணகிரியில் பெண் போலீஸ் ஏட்டு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் காந்திமதி (வயது 43). இவருக்கும், பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகனுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. முருகன் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள விடுதியின் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ஏட்டு காந்திமதி குடும்பத்துடன் கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினையால் மனம் உடைந்த ஏட்டு காந்திமதி துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News