செய்திகள்

தஞ்சையில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை - பணம் கொள்ளை

Published On 2018-05-19 14:42 GMT   |   Update On 2018-05-19 14:42 GMT
வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பழனியப்பன் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தஞ்சைக்கு வந்தார்.

அவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இதை நோட்டமிட்டு கொண்டிருந்த மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இந்நிலையில் வீடு திரும்பிய வெங்கடேஷ் கொள்ளை நடந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News