செய்திகள்

புழல் ஜெயில் கைதி ஆஸ்பத்திரியில் மரணம்

Published On 2018-04-23 10:46 GMT   |   Update On 2018-04-23 10:46 GMT
கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருந்த கைதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்குன்றம்:

கடலூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்கிற கோபி(53) கள்ளச்சாராயம் விற்ற வழக்கில் இவர் கடந்த 7 ஆண்டுகளாக கடலூர் ஜெயிலில் இருந்து வந்தார். மஞ்சள்காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த மார்ச் மாதம் கடலூர் ஜெயிலில் இருந்து புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். இவரை சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோவிந்தராஜ் இறந்தார். இதுகுறித்து புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News