செய்திகள்

கள்ளக்குறிச்சியில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை

Published On 2018-04-19 11:09 GMT   |   Update On 2018-04-19 11:09 GMT
கள்ளக்குறிச்சியில் குடும்ப பிரச்சனை காரணமாக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 30). இவரது மனைவி பூரணசந்திரா (25). தற்போது இவர் கர்ப்பிணியாக உள்ளார்.

ராமச்சந்திரன் கள்ளக்குறிச்சியில் உள்ள டெலிபோன் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலைப்பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது பூரணசந்திரா உங்களுடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனது தாய் வீட்டுக்கு சென்று விடுகிறேன் என்று கூறினார். பின்னர் இருவரும் தூங்க சென்றனர்.

தனது மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு செல்வதாக கூறியதை கேட்ட ராமச்சந்திரன் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் இன்று அதிகாலை ராமச்சந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் கண் விழித்து பார்த்த பூரண சந்திரா தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News