செய்திகள்

கேரளாவில் வட மாநில சிறுமி கற்பழிப்பு - வாலிபர் கைது

Published On 2018-04-18 05:56 GMT   |   Update On 2018-04-18 05:56 GMT
கேரளாவில் வட மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் செய்யப்பட்டார்.
தக்கலை:

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூர் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.

இந்த தொழிலாளர்கள் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் குமரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் தங்கி கட்டிட பணி செய்து வருகிறார்கள்.

இங்கு வசிக்கும் வடமாநில தம்பதி ஒருவரின் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அங்கு தங்கி இருந்த குமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தானகுமார் (வயது 28) என்பவர் மீது பெரும்பாவூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுபற்றி பெரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சந்தான குமார் தலைமறைவாகி இருப்பதும் அவர், தனது சொந்த ஊருக்கு தப்பிச் சென்றுவிட்டதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து பெரும்பாவூர் போலீசார் நேற்றிரவு தக்கலை வந்தனர். இங்கு தக்கலை போலீசார் உதவியுடன் அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் இன்று காலை சந்தானகுமாரை கேரள போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை விசாரணைக்காக பெரும்பாவூர் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தக்கலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News