செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே சாமி கும்பிடுவதில் மோதல்

Published On 2018-04-17 10:57 GMT   |   Update On 2018-04-17 10:57 GMT
ஆண்டிப்பட்டி அருகே சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட மோதலில 2 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேனி:

ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அருகே உள்ள ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் சாமிராஜ். இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த சுருளிவேல். சம்பவத்தன்று இவரது தோட்டத்தின் அருகே சாமி கும்பிடுவதற்காக சாமிராஜ் சென்றார். அவர் தனியாக பொங்கல் வைத்து சாமி கும்பிட்டார்.

அப்போது அங்கு வந்த சுருளிவேல் ஏன் நீ மட்டும் தனியாக பொங்கல் வைத்து சாமி குடும்பிடுகிறாய், எங்களையும் சேர்த்துக்கொண்டு கும்பிட வேண்டியதுதானே என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் வாக்குவாதம் முற்றி ஆத்திரம் அடைந்த சுருளிவேல், சாமிராஜை தாக்கினார். இது குறித்து சாமிராஜ் கொடுத்த புகாரின் பேரில் கண்டமனூர் போலீசார் சுருளிவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல சுருளிவேல் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் சாமிராஜ் மகன் பிரபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படுகாயம் அடைந்த 2 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News