செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 49 கன அடி

Published On 2018-04-16 11:24 GMT   |   Update On 2018-04-16 11:24 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நேற்று 49 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் நீடித்தது.
சேலம்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நேற்று 49 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் நீடித்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

நேற்று 35.87 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 35.76 அடியாக குறைந்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாவிட்டால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது.

இதனால் அணையை நம்பியுள்ள குடிநீர் திட்டங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
Tags:    

Similar News