செய்திகள்

ஓமலூர் அருகே பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2018-04-16 10:21 GMT   |   Update On 2018-04-16 10:21 GMT
சேலம் மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வசித்து வரும் 17 வயது மாணவி ஒருவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இம்மாணவிக்கும், ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி கீழ்வீதியை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கத்தை பயன்படுத்தி விஜயகுமார், மாணவி தனியாக இருந்த போது, அவரது வீட்டிற்குள் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து வெளியே சொன்னால் உனது குடும்பத்துடன் உன்னையும் சேர்த்து கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றுள்ளார். இதனால் பயந்து போன மாணவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கர்ப்பம் ஆன மாணவி தொடர்ந்து வீட்டில் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார். வயிறு நாளுக்கு நாள் பெரிதாகி வருவதை கண்ட அவரது உறவினர்கள் மாணவியிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது விஜயகுமார் என்பவர் தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என்றும், தான் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார் என்பதும், இவருக்கும், இவரது உறவுகார பெண்ணுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட விஜயகுமாரை சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News