செய்திகள்

களக்காட்டில் விவசாயி தற்கொலை

Published On 2018-04-12 14:40 GMT   |   Update On 2018-04-12 14:40 GMT
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவ குறித்து களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






களக்காடு:

களக்காடு அருகே உள்ள அப்பர்குளத்தை சேர்ந்தவர் பரமசிவன் (வயது70) விவசாயி. இவரது மனைவி அழகம்மாள்(60). இவர்களுக்கு சண்முககுமார்(36) என்ற மகன் உள்ளார். 

இந்நிலையில் பரமசிவனுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதில் மனம் உடைந்த பரமசிவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பரமசிவனை மீட்டு ஏரல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News