செய்திகள்

போடி அருகே கணவன்-மனைவியை தாக்கிய கும்பல்

Published On 2018-04-07 11:31 GMT   |   Update On 2018-04-07 11:31 GMT
போடி அருகே கணவன் மற்றும் மனைவியை தாக்கிய கும்பல் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

போடி அருகே குரங்கணி முந்தல் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மனைவி அஸ்வினி(வயது20). கோவையில் உள்ள ஒரு தனியார் மில்லில் அஜித்குமார் வேலை பார்த்து வருகிறார். கோவில் திருவிழாவிற்காக சொந்தஊர் வந்துள்ளார்.

சம்பவத்தன்று இவரது வீடு அருகே அதேபகுதியை சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது மகன்கள் காமாட்சி, விஜயன், செல்வக்குமார் ஆகியோர் தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இதனை அஜித்குமார் தட்டிகேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை தாக்கினர். இதனை தடுக்கவந்த அஸ்வினியும் தாக்கப்பட்டார். இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குபதிவு செய்து விஜயனை கைது செய்தனர்.

Tags:    

Similar News