செய்திகள்
தஞ்சையில் கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை, கீழவாசல் பெரிய தெருவைச் சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மனைவி விதிமலர். இவர்களுடைய மகள் சங்கீதா (வயது 19). கல்லூரி மாணவி.
இந்தநிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சம்பந்தம் பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.
இதைதொடர்ந்து சம்பந்தம் தஞ்சை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான மாணவி சங்கீதாவை வருகின்றனர்.