செய்திகள்

திருக்கனூர் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி

Published On 2018-03-12 11:33 GMT   |   Update On 2018-03-12 11:33 GMT
திருக்கனூர் அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கானாத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மருதமலை (வயது 45). லாரி டிரைவர்.

இவர் சம்பவத்தன்று லாரியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு திருக்கனூர் அருகே தேத்தாம்பாக்கத்தில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு வந்தார்.

அங்கு பொருட்களை இறக்கிவைத்த பின்னர் மருதமலை அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்று அளவுக்கு அதிகமாக மதுகுடித்தார்.

மருதமலை போதையில் இருந்ததால் மாற்று டிரைவர் லாரியை அங்கிருந்து ஓட்டி சென்றார். அப்போது மருதமலை லாரியில் இருந்து தவறி விழுந்தார்.

இதையடுத்து காயமடைந்த அவர் திருவண்ணாமலைக்கு சென்று அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மருதமலை இறந்துபோனார்.

இதுகுறித்து அவரது மகள் மகேஷ் கொடுத்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
Tags:    

Similar News