செய்திகள்

நாசரேத் அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2018-01-30 12:02 GMT   |   Update On 2018-01-30 12:02 GMT
நாசரேத் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜன்(வயது 57). இவர் சென்னையில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விஜயா (52). இவர்களுக்கு ரூத், சலோமி என்ற 2 மகள்கள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜன் கடந்த 27-ம் தேதி மூக்குப்பீறியில் வசிக்கும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவரது மாமனார் ஆல்பர்ட் என்பவரை பார்ப்பதற்காக ஊருக்கு வந்துள்ளார். சம்பவத்தன்று ராஜன் மூக்குப்பீறியில மாமானார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து நாசரேத் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News