செய்திகள்

லாலாப்பேட்டை அருகே கம்யூனிஸ்ட் நிர்வாகி வீடு சூறை - 3 பேரை கைது

Published On 2018-01-23 14:03 GMT   |   Update On 2018-01-23 14:03 GMT
லாலாப்பேட்டை அருகே கம்யூனிஸ்ட் நிர்வாகி வீட்டை சூறையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாலாப்பேட்டை:

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள ஓமாந்தூரை சேர்ந்த வர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கண்ணதாசன் (வயது 52), கிருஷ்ணராயபுரம் பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர்.

இவரது வீட்டின் அருகே கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இது தொடர்பாக கண்ணதாசனுக்கும், அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கண்ணதாசனின் வீட்டின் வழியாக வந்த அதே ஊரை சேர்ந்தவர்களான குமார் (22), தர்மபூபதி (32) ஆகியோர் உட்பட 7 பேர், கண்ணதாசனை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது வீட்டின் மேற்கூரையையும் சூறையாடினர்.

இந்த திடீர் மோதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அறிந்த லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அங்கு மோதலில் ஈடுபட்ட தர்மராஜ், குமார், தர்மபூபதி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News