செய்திகள்

வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய கும்பல் கைது

Published On 2018-01-20 12:15 GMT   |   Update On 2018-01-20 12:15 GMT
வடமதுரை அருகே பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள வேலாயுதம்பாளையம் மலையடிவார கரடு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் ரகசியமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் பணம் வைத்து உள்ளே வெளியே சூதாட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் டி.புதூரைச் சேர்ந்த கணேசன் (வயது 57), குஜிலியம்பாறையைச் சேர்ந்த பழனி (50), தும்மலக்குண்டு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (37), எஸ்.புதுப்பட்டியைச் சேர்ந்த கருஞ்சாமி ஆகியோர் என தெரிய வந்தது.

போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News