செய்திகள்
கரையாம்புத்தூர் அருகே கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
கரையாம்புத்தூர் அருகே கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
கரையாம்புத்தூர் அருகே உள்ள மணமேடு காலனி எம்.ஏ.எஸ். நகரை சேர்ந்தவர் சீசர் (வயது59), விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு செல்லபாங்கி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு சீசருக்கு நோய் கொடுமை அதிகமானது. இதனால் மனமுடைந்த சீசர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் வீட்டிலேயே கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.