செய்திகள்

திசையன்விளை அருகே மணல் கடத்திய லாரியை இரவில் மடக்கிய பொதுமக்கள் - கும்பல் தப்பி ஓட்டம்

Published On 2017-12-21 11:34 GMT   |   Update On 2017-12-21 11:34 GMT
திசையன்விளை அருகே ஆற்று மணல் கடத்திச் சென்ற லாரியை நள்ளிரவில் 100-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு உள்ளது. இந்த ஆற்று பகுதியான உறுமன்குளத்தில் நேற்று இரவு ஒரு கும்பல் மினி லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர்.

தகவல் அறிந்து அந்த பகுதியில் உள்ள பெருங்குளம், அணைக்கரை கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் மணல் திருட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த கும்பலை நோக்கி சென்றனர்.

கிராம மக்கள் வருவதை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் தப்பி ஓடிய கும்பலை விரட்டி சென்றனர். அதில் உறுமன்குளத்தை சேர்ந்த இசக்கியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மணல் அள்ள பயன்படுத்திய மினி லாரி மற்றும் 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இதையடுத்து போலீசார் வேறு எதுவும் மணல் கடத்தல் நடக்கிறதா? என இரவு முழுவதும் கண்காணித்தனர். இந்நிலையில் இன்று காலை செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மினி லாரி சிக்கியது. இது தொடர்பாக பெருங்குளத்தை சேர்ந்த யாகப்பன் என்பவரை திசையன்விளை போலீசார் கைது செய்தார்.
Tags:    

Similar News