செய்திகள்

கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதி பெண்ணிடம் கேலி-கிண்டல்: வாலிபர் ஜெயிலில் அடைப்பு

Published On 2017-12-20 16:22 GMT   |   Update On 2017-12-20 16:22 GMT
கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த இலங்கை அகதி பெண்ணிடம் கேலி மற்றும் கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.

சேதராப்பட்டு:

புதுவை அருகே உள்ள கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு ஆண்டோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பவித்ரா (வயது 22).

இவர், அங்குள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது அதே அகதிகள் முகாமை சேர்ந்த அரவிந்தன் (26) என்பவர் பவித்ராவை கேலி- கிண்டல் செய்தார்.

இதுபற்றி அவர் தனது தந்தையிடம் தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர். சப்- இன்ஸ்பெக்டர் அருண் செல்வம் வழக்கு பதிவு செய்து அரவிந்தனை கைது செய்தார்.

பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News