செய்திகள்

புதுவை வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Published On 2017-12-15 11:13 GMT   |   Update On 2017-12-15 11:14 GMT
நீதிமன்ற வக்காலத்து மனுவில் வக்கீல்கள் தங்களின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என புதிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி:

நீதிமன்ற வக்காலத்து மனுவில் வக்கீல்கள் தங்களின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என புதிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் வக்கீல்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை கண்டித்து புதுவை வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. 

புதுவை வக்கீல்கள் யாரும் கோர்ட்டு பணிகளில் ஈடுபடவில்லை. இதனால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோர்ட்டை புறக்கணித்த வக்கீல்கள் சங்க அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். இன்று விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறொரு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News