search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டு புறக்கணிப்பு"

    • கோர்ட்டுகளில் காந்தி, திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும்.
    • படங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோர்ட்டில் வக்கீல்கள், தங்களின் பணிகளை புறக்கணித்து போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கோர்ட்டுகளில் காந்தி, திருவள்ளுவர் படங்களை மட்டுமே வைக்க வேண்டும். மற்ற படங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். இதனை கண்டி த்தும் கோர்ட்டுகளில் அம்பேத்கர் படத்தை வைக்க அனுமதிக்க வலியுறுத்தியும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான அநீதிகளை கண்டித்தும் திண்டி வனம் வக்கீல்கள் இன்று பணி களை புறக்கணித்தனர்.

    கோர்ட்டு வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென வக்கீல்கள் அனைவரும் கோர்ட்டு வளாகத்தை விட்டு வெளியில் வந்த னர். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு கோஷ ங்கள் எழுப்பினர்.

    அங்கு பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த மயிலம் போலீசார், வக்கீ ல்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடைபெ ற்றது. இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீ சார் வரவழைக்கப்ப ட்டு சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்களை அப்புறப்ப டுத்தினர்.

    வக்கீல்கள் செய்த திடீர் சாலைமறியலால் சென்னை - திருச்சி நெடுஞ்சா லையில் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்க ப்பட்டது.

    • 19-ந் தேதி நடந்த ஒரு சம்பவத்தில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த, போலீசார் தடியடி நடத்தினர்.
    • இதனை கண்டித்து, சேலம் நீதிமன்ற வக்கீல்கள் ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி 19-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சேலம்:

    சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி நடந்த ஒரு சம்பவத்தில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த, போலீசார் தடியடி நடத்தினர்.

    இதனை கண்டித்து, சேலம் நீதிமன்ற வக்கீல்கள் ஒவ்வொரு வருடமும், பிப்ரவரி 19-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, நாளை கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்த இருந்த நிலையில், விடுமுறை தினம் என்பதால் இன்று சேலம் நீதிமன்றத்தில் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

    • வக்கீல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் இன்று 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வக்கீல் சாமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்த சாமிநாதன் (37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவதென வக்கீல்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி உள்ளிட்ட கோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 2000 வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதாக ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறினார்.

    ×