search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "court today in Erode"

    • வக்கீல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் இன்று 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வக்கீல் சாமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்த சாமிநாதன் (37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவதென வக்கீல்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி உள்ளிட்ட கோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 2000 வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதாக ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறினார்.

    ×