search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boycotted"

    • குடியரசு தினவிழாவையொட்டி இன்று பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்திலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
    • கங்கைகொண்டான் அருகே உள்ள அலவந்தான்குளம் கிராமத்தில் பள்ளமடை, நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    குடியரசு தினவிழாவையொட்டி இன்று பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்திலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. கங்கைகொண்டான் அருகே உள்ள அலவந்தான்குளம் கிராமத்தில் பள்ளமடை, நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்நிலையில் அலவந்தான்குளம் கிராம மக்கள் இன்று கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். அவர்கள் கிராமசபை கூட்டம் நடந்த பகுதி முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தை தனியார் நிறுவனங்களுக்காக சிப்காட் மூலம் அரசு கையகப்படுத்துவதாக தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிந்து நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். எனவே அதனை கைவிட வேண்டும் என தெரிவித்தனர்

    • வக்கீல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் இன்று 2 ஆயிரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வக்கீல் சாமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    ஈரோடு:

    தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார் கோவிலை சேர்ந்த சாமிநாதன் (37). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவதென வக்கீல்கள் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்திருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, கொடுமுடி உள்ளிட்ட கோர்ட்டுகளில் பணியாற்றி வரும் 2000 வக்கீல்கள் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டதாக ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறினார்.

    பக்ரைனில் நடந்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. #Bakriniparliamentaryelections
    துபாய், 

    பக்ரைனில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள், தேர்தலை புறக்கணிக்க விடுத்த அழைப்புக்கு மத்தியில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    வளைகுடா நாடுகளில் ஒன்று பக்ரைன். அங்கு சன்னி பிரிவை சேர்ந்த மன்னர் ஹமாத்தின் ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் அரசியலமைப்பின் கீழான மன்னராட்சியை ஏற்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைக் கொண்ட அரசு அமைக்க வேண்டும் என்று ஷியா பிரிவு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்தனர்.

    இதையொட்டி 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக அந்த எதிர்க்கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்த கிளர்ச்சி, ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் பலவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு நவம்பர் 24-ந்தேதி (நேற்று) தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

    இந்த தேர்தலில் ஷியா பிரிவு எதிர்க்கட்சியான ஷியா அல் வெபாக் மற்றும் மதச்சார்பற்ற வாத் கட்சிகள் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன.

    எனவே இந்த தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அந்த கட்சிகள் வலியுறுத்தி அழைப்பு விடுத்தன. இந்த தேர்தல் கேலிக்கூத்தானது, நம்பகத்தன்மையற்றது என கூறி ஜனநாயக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

    இதுவும் அங்கு பிரச்சினையை ஏற்படுத்தியது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக 6 பேர் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஷியா அல் வெபாக் கட்சியின் முன்னாள் எம்.பி. அலி ரஷீத் அல் அஷீரியும் அடங்குவார்.

    இந்த அஷீரியும், அவரது குடும்பத்தினரும் தேர்தலை புறக்கணிப்பதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இருப்பினும் 40 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு 506 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். பெண் வேட்பாளர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    தற்போதைய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களில் 23 பேர் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியில் உள்ளனர். நாடாளுமன்றத்துக்கு வரம்புக்குட்பட்ட அதிகாரங்கள்தான் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று மன்னர் ஹமாத், மக்களை கேட்டுக்கொண்டார். இதே போன்று வேட்பாளர்களும், மக்கள் ஓட்டு போட்டு தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

    உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அழைப்புக்கு மத்தியிலும் வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். இரவு 8 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது.

    முக்கிய எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலின் மூலம் அமைய உள்ள புதிய நாடாளுமன்றம் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழுந்து உள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். #Bakriniparliamentaryelections
    ×