மனைவியுடன் தகராறில் பொதுப்பணித்துறை ஊழியர் தற்கொலை
புதுச்சேரி:
முத்தியால் பேட்டை சின்னையாபுரம் சின்ன கிணற்று வீதியை சேர்ந்தவர் துரைமுருகன் (வயது 37). இவர் புதுவை அரசின் பொதுப்பணித்துறையில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
மது குடிக்கும் பழக்கம் உள்ள துரைமுருகன் தின மும் மது குடித்து விட்டு மனைவி ஆதிலட்சுமியுடன் (32) தகராறு செய்வது வழக்கம்.
அதுபோல் நேற்று இரவு துரைமுருகன் மது குடித்து விட்டு வீட்டில் மனைவியுடன் தகராறு செய்தார்.
அப்போது வீட்டில் இருந்த பொருட் களை அடித்து உடைத்த துரைமுருகன் பின்னர் மனைவி- குழந்தைகளை வீட்டை விட்டு துரத்தி விட்டு கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார்.
வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த துரைமுருகனின் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது மின் விசிறியில் துப்பட்டாவால் துரைமுருகன் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வீர வேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.