செய்திகள்
பொதுமக்கள் சரத்குமாருடன் தொடர்பு கொள்ள செல்போன் ‘செயலி’ வெளியீடு
நடிகர் சரத்குமார் செல்போன் மூலம் அனைத்து தரப்பு மக்களுடனும் நேரடியாக தொடர்பு கொள்ளவும், கருத்துக்களை பறிமாறவும் செல்போன் செயலி(ஆப்) ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
நடிகர் சரத்குமார் செல்போன் மூலம் அனைத்து தரப்பு மக்களுடனும் நேரடியாக தொடர்பு கொள்ளவும், கருத்துக்களை பறிமாறவும் செல்போன் செயலி(ஆப்) ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஏஎஸ்கே என்று இந்த செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செயலியை செல்போனில் பதிவு செய்து கொள்வதன் மூலம், சரத் குமாருடன் நேரடியாக கருத்துக்களை பறிமாறிக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தினமும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணவும், சமூக சீர்திருத்தத்துக்கும் உதவும் வகையிலும் பொது மக்கள் எளிதில் இதை அணுகலாம்.
படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சரத்குமாரின் சமூக நல சிந்தனைகளும் இந்த செயலியில் இடம் பெறும். சென்னையில் நடந்த இந்த செயலி வெளியீட்டு விழாவில் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி, ரெய்னே உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செயலியை செல்போனில் பதிவு செய்து கொள்வதன் மூலம், சரத் குமாருடன் நேரடியாக கருத்துக்களை பறிமாறிக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தினமும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காணவும், சமூக சீர்திருத்தத்துக்கும் உதவும் வகையிலும் பொது மக்கள் எளிதில் இதை அணுகலாம்.
படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சரத்குமாரின் சமூக நல சிந்தனைகளும் இந்த செயலியில் இடம் பெறும். சென்னையில் நடந்த இந்த செயலி வெளியீட்டு விழாவில் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி, ரெய்னே உள்பட பலர் கலந்து கொண்டனர்.