செய்திகள்

கம்பம் பகுதியில் ஜவுளிக்கடை அதிபர் விபத்தில் சிக்கி பலி

Published On 2017-12-11 17:27 GMT   |   Update On 2017-12-11 17:27 GMT
கம்பம் பகுதியில் ஜவுளிக்கடை அதிபர் விபத்தில் சிக்கி பலியானார். விபத்து குறித்து கம்பம் வடக்கு பகுதி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் வேலப்பர் கோவில்  தெருவை சேர்ந்தவர் முகமது மைதீன் (வயது 40). வேலப்பர் கோவில் தெரு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.

இவர் நாள்தோறும் காலை நேரத்தில் கம்பம்மெட்டு பகுதியில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாட செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை அவர் விளையாட சென்றார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

கம்பம் மெட்டுமலை அடிவாரப்பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பாலத்தில் வேகமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டதில் முகமது மைதீனுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து கம்பம் வடக்கு பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News