செய்திகள்
ஒக்கி புயலில் சிக்கி மாயமான புதுவை மீனவர்கள் லட்சத்தீவில் தவிப்பு
ஒக்கி புயலில் சிக்கி லட்சத்தீவில் தவித்து வரும் புதுவை மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார் குப்பம் நரம்பை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஆறுமுகம் (வயது 50), மணிகண்டன் பிரபு (23), அருள்ராஜ் (25), கந்தநாதன் (25), ஆனந்து (30) ஆகிய 5 பேரும் கேரளாவில் தங்கி இருந்து மீன்பிடித்து வந்தனர்.
வழக்கம் போல் கடந்த 1-ந்தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தோப்பம்பட்டி துறை முகத்தில்இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது ஒக்கி புயலில் சிக்கி இந்த மீனவர்கள் தவித்தனர். அவர்களை பற்றிய தகவல் தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
இந்த நிலையில் மீனவர்கள் 5 பேரும் லட்சத்தீவு அருகே இருப்பதாகவும், உணவின்றி தவித்து வருவதாகவும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து 5 மீனவர்களின் குடும்பத்தாரும், நரம்பை கிராம பஞ்சாயத்தாரும் லட்சத்தீவில் தவிப்பவர்களை மீட்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கோரிக்கை விடுத்தனர். அவர் மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
புதுவை மாநிலம் கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார் குப்பம் நரம்பை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஆறுமுகம் (வயது 50), மணிகண்டன் பிரபு (23), அருள்ராஜ் (25), கந்தநாதன் (25), ஆனந்து (30) ஆகிய 5 பேரும் கேரளாவில் தங்கி இருந்து மீன்பிடித்து வந்தனர்.
வழக்கம் போல் கடந்த 1-ந்தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தோப்பம்பட்டி துறை முகத்தில்இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது ஒக்கி புயலில் சிக்கி இந்த மீனவர்கள் தவித்தனர். அவர்களை பற்றிய தகவல் தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.
இந்த நிலையில் மீனவர்கள் 5 பேரும் லட்சத்தீவு அருகே இருப்பதாகவும், உணவின்றி தவித்து வருவதாகவும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து 5 மீனவர்களின் குடும்பத்தாரும், நரம்பை கிராம பஞ்சாயத்தாரும் லட்சத்தீவில் தவிப்பவர்களை மீட்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கோரிக்கை விடுத்தனர். அவர் மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.