செய்திகள்

கடத்தூர் அருகே வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2017-11-26 16:12 GMT   |   Update On 2017-11-26 16:12 GMT
கடத்தூர் அருகே வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள சுங்கரஅள்ளியைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மனைவி வளர்மதி (வயது 39). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து வளர்மதி என்னகாரணத்திற்காக வி‌ஷம் குடித்தார்? என்றும், குடும்ப தகராறு காரணமாக வி‌ஷம் குடித்தாரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News