செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் மனைவி கோபித்து சென்றதால் கணவன் தற்கொலை

Published On 2017-11-22 10:27 GMT   |   Update On 2017-11-22 10:28 GMT
மனைவி கோபித்து தாய் வீட்டுக்குசென்றதால் மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை முத்திரையர் பாளையம் காந்தி திரு நல்லூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திகுமார் (வயது 32) டிரைவர். இவருக்கு ரேவதி (28) என்ற மனைவியும், அபிராமி (7) என்ற மகளும் உள்ளனர்.

சக்திகுமார் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ரேவதி தனது மகளை காலை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சக்திகுமார் மனைவிக்கு போன் செய்தார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. காலை 11.30 மணியளவில் ரேவதி மகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்தார்.

பிறகு மகளை அழைத்து கொண்டு சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

வீட்டுக்கு வந்த சக்திகுமார் இருவரையும் காணாதது குறித்து மனைவிக்கு மீண்டும் போன் செய்தார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலேயே வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை 6.30 மணியளவில் சக்திகுமாரின் அப்பா கார்த்திகேயன் அங்கு வந்தார். அப்போது கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இனியன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆளவந்தான் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News