செய்திகள்

இன்று 44-வது பிறந்தநாள்: தீபா ஜெயலலிதா சமாதியில் வணங்கினார்

Published On 2017-11-10 09:22 GMT   |   Update On 2017-11-10 09:22 GMT
தீபாவுக்கு இன்று 44-வது பிறந்தநாள். இதையொட்டி நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கினார்.
சென்னை:

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.

இந்த அமைப்பில் ஏற்பட்ட கோஷ்டி பூசலும், குடும்ப பிரச்சனையும் தீபாவுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கியதோடு அமைப்பிலும் தீவிரமாக செயல்பட முடியவில்லை.

தீபாவின் கணவர் மாதவனுக்கும், கட்சி நிர்வாகிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போலீஸ் நிலையம் வரை சென்றது. அப்போது தீபா கணவருக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தையடுத்து சில நாட்கள் தீபா மாயமானார். இதனால் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.

தீபாவுக்கு இன்று 44-வது பிறந்தநாள். இதையொட்டி நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று வணங்கினார்.

இன்று காலையில் தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அவரது ஆதரவாளர்கள் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி, பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News