செய்திகள்

பெரியபாளையம் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு: 8 பேர் கைது

Published On 2017-10-20 10:40 GMT   |   Update On 2017-10-20 10:40 GMT
பெரியபாளையம் அருகே 2 பேரை அரிவாளாள் தாக்கியது தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.
பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே உள்ள கொசவன் பேட்டையை சேர்ந்தவர் சுஜித்குமார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டு முன்பு பட்டாசு வெடித்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர்கள் சுஜித்குமார் குடும்பத்தினர் மீது மோதுவது போல் சென்றதாக தெரிகிறது.

இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த செல்வராஜின் நண்பர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுஜித் குமார் மற்றும் அவரது உறவினர் மதன்குமாரை அரிவாளால் வெட்டி தப்பி சென்றுவிட்டனர். படுகாயம் அடைந்த 2 பேருக்கும் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பெரிய பாளையம் சப்-இன்ஸ் பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்த செல்வராஜ், அவரது நண்பர்கள் அருண்குமார், அசாருதீன், ரவி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ஊத்துக் கோட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News