செய்திகள்

ஓசூர் அருகே தனியார் கம்பெனி ஊழியர் மர்ம மரணம்

Published On 2017-09-27 12:32 GMT   |   Update On 2017-09-27 12:32 GMT
ஓசூர் அருகே தனியார் கம்பெனி ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பஸ்டி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 25). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் ஓசூரில் உள்ள வீட்டில் தனியாக தான் தங்கி இருந்தார். அவ்வபோது வீட்டில் இருந்து பெங்களூருவில் உள்ள கம்பெனிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து செல்வார். நேற்று இரவு கம்பெனியில் வேலையை முடித்து விட்டு ஓசூரில் உள்ள வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் தூங்க சென்றார். இன்று காலை அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அப்போது அக்கம் பக்கத்தினர் சந்தேகம்பட்டு கதவை திறந்து பார்த்தனர். அங்கு கந்தசாமி பிணமாக கிடந்தார்.

வீட்டினுள்ள துணி மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. இதுகுறித்து ஓசூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கந்தசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தனியாக இருந்த கந்தசாமியை மர்ம நபர்கள் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை போலீசார் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News