செய்திகள்

எட்டயபுரம் அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

Published On 2017-09-25 16:00 GMT   |   Update On 2017-09-25 16:00 GMT
எட்டயபுரம் அருகே பெண் கொடுக்க மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள எம்.கோட்டூரை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து அழகுபாண்டி காதலியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார்.

அப்போது அவர்கள் பெண் கொடுக்க மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அழகுபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.       
Tags:    

Similar News