செய்திகள்

பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2017-09-14 15:13 GMT   |   Update On 2017-09-14 15:14 GMT
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 22-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 22-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும்.

விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News