செய்திகள்

திருவாரூர் அருகே குழியில் தேங்கிய நீரில் மூழ்கி குழந்தை பலி

Published On 2017-09-11 09:53 GMT   |   Update On 2017-09-11 09:53 GMT
திருவாரூரில் கழிவு நீர் தேக்க தொட்டிக்காக கட்டப்பட்ட குழியில் தேங்கிய நீரில் மூழ்கி குழந்தை பலியானது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் சேந்தனாங்குடியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு சர்வேஸ்வரன்(8) என்ற மகனும் சிவசங்கரி (3) என்ற மகளும் உள்ளனர்.

நேற்று வீடு அருகே விளையாடி கொண்டிருந்த சிவசங்கரி திடீரென காணாமல் போனாள். அருகில் உள்ள வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

கருணாநிதி வீட்டின் பின்புறத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறைக்கான செப்டிக் டேங்க் அமைப்பதற்கு தோண்டப்பட்ட குழியில் மழை நீர் தேங்கி இருந்தது.

அதில் மூழ்கி சிவசங்கரி இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவளது உடல் மீட்கப்பட்டது. இது குறித்து வடபாதி மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News