செய்திகள்
தேனி அருகே பைக் மீது ஜீப் மோதல்: டிரைவர் பலி
தேனி அருகே பைக் மீது ஜீப் மோதிய விபத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த டிரைவர் உயிரிழந்தார்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பராஜ் (வயது 31). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் தேனிக்கு வந்தார். தேனி நேருசிலை அருகே சென்று கொண்டு இருந்தபோது அவ்வழியே வந்த ஜீப் இவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் அய்யப்பராஜ் கீழே விழுந்து காயமடையவே ஜீப்பை ஓட்டி வந்த சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்த பாஸ்கரபாண்டியன் (50) என்பவர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த விபத்தில் பாஸ்கர பாண்டியன் உடலில் காயம் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.