செய்திகள்
ஜெய்ஹிந்துபுரத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வேலை கிடைக்காததால் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை எம்.கே. புரம், சுண்ணாம்பு காளவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மகன் கார்த்திக் (வயது 24). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் சர்மிளா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மித்ரா (1ம்) என்ற மகள் உள்ளார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு கார்த்திக் வேலையை விட்டு விட்டார். அதன் பிறகு சரியான வேலையின்றி இருந்தார்.
இதனால் மனவேதனை அடைந்த கார்த்திக் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசில், அவரது உறவினர் பச்சையம்மாள் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.