செய்திகள்

பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு சனிக்கிழமை பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Published On 2017-07-29 06:40 GMT   |   Update On 2017-07-29 06:40 GMT
பொதுத்தேர்வு எழுதுபவர்களுக்கு சனிக்கிழமை தோறும் முழு நேரமும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

பிளஸ்-1 பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. பிளஸ்-1 பொதுத்தேர்வுக்காக சிறப்பு திட்டம் வரும் திங்கட் கிழமை வெளியிடப்பட உள்ளது. மேலும் 54 ஆயிரம் வினாக்கள் கொண்ட சிறப்பு கையேடும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

1 லட்சத்து 27 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டமும் அடுத்த வாரம் அறிவிக்கப்படும். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாநிலம் முழுவதும் 450 மையங்கள் அமைக்கப்பட்டு சனிக்கிழமை தோறும் முழு நேரமும் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News