செய்திகள்

தேனி அருகே ஓடை மணல் கடத்திய கும்பல் கைது

Published On 2017-07-22 14:09 GMT   |   Update On 2017-07-22 14:09 GMT
தேனி அருகே ஓடை மணல் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

தேனி:

தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி பகுதியில் மணல் கடத்தல் அதிகரித்துள்ளதாக ஓடைப்பட்டி போலீசாருக்கு புகார் வந்தது. அதன்படி வேப்பம்பட்டி-அழகாபுரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பேர் மாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்றுகொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் வேப்பம்பட்டியை சேர்ந்த முருகன் (53), விஜயகுமார் (27) என தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News