செய்திகள்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் பலி

Published On 2017-07-17 11:14 GMT   |   Update On 2017-07-17 11:14 GMT
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சுமார் 64 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனை பார்த்த கோஅபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் அந்த நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் மணி என தெரியவந்துள்ளது.

மேலும் அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார் என்பது தெரிய வில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News