செய்திகள்
கம்பம் அருகே இரும்பு கம்பி குத்தி வடமாநில வாலிபர் பலி
கம்பம் அருகே இரும்பு கம்பிகள் குத்தி வடமாநில வாலிபர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேனி:
ஒடிசா மாநிலம் மங்காபுரியைச் சேர்ந்த ஜான் ஓரம் மகன் அசோக் ஓரம் (வயது 27). இவர் கம்பத்தில் உள்ள ஒரு தனியார் புண்ணாக்கு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அதிகாலை எழுந்து காலைக்கடன்களை முடிக்க நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்ததில் அங்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக வைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பிகள் மீது விழுந்தார்.
இதில் அவரது உடல் முழுவதும் கம்பிகள் குத்தி படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டியைச் சேர்ந்த விஜயன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.