செய்திகள்
சேலம் மாநகரத்தில் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்: டி.ஜி.பி. உத்தரவு
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன் சேலம் தெற்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டி.ஜி.பி பிறப்பித்தார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சரவணன். இவர் நேற்று இரவு சேலம் தெற்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதுபோன்று நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சசிகுமாரை சேலம் மாநகரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டி.ஜி.பி அசோக்குமார் நேற்று இரவு பிறப்பித்தார்.
சேலம் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் திடீரென்று மாற்றப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.