ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி கண்டனம்
சென்னை:
அ.தி.மு.க. அம்மா கட்சி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புரட்சித் தலைவி அம்மாவை கடுமையாக தரக்குறைவாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்படும்.
அவரது கட்சித் தலைவர் சோனியா, ராகுலை பற்றி புரட்சித்தலைவி அம்மா எந்த இடத்திலும் அநாகரீகமாக விமர்சித்தது கிடையாது. எனவே அரசியல் நாகரீகம், பண்பாட்டை காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவரது தாயார் சுலோசனா சம்பத் மறைந்த போது அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய புரட்சித்தலைவி அம்மா, அங்கிருந்த இளங்கோவனிடம் மனமாச்சரியங்களை மறந்து துக்கம் விசாரித்து விட்டு வந்தார். அந்த நாகரீகம், பண்பாடு மரியாதை எதுவுமே இளங்கோவனி டம் இல்லை. எனவே இளங்கோவனுக்கு நாவடக்கம் தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.